Sunday, June 28, 2020

இறைவாழ்த்து

முத்தமிழ் அருளிய 
முக்கண்ணன் முதல்வனே

நற்றமிழோடு நற்குணம்
நல்கும் நாயகனே

யார் பிள்ளை இவனென
வியக்கும் வாழ்வருளும்
பிள்ளையாரே...

ஊனுடைத்து எழுதிய
எழுத்துலகின் வித்தானவனே

பொன்னியை காவிரியாக்கிய
காவியத் தலைவனே

அரங்கனை கொள்ளிடக்கரை
அமர்த்திய ஐந்துகரத்தோனே

உச்சியில் உறைந்து
உய்விக்க வந்தோனே

இதயமத்தியில் இருத்தி
இருகரம் கூப்பி
அழைக்கிறேன்

இம்மை இருளகற்றி
மறுமை இல்லா
மோட்சமாய் 

மலராய் மணமாய்
அருகாய் அருள்வாய்
அழகின் மூத்தோனே...




நதியரசியும் கடலரசனும்

நதியரசியும் கடலரசனும் மங்கையிவள் மன்னனுடன் ஊடல் கொண்டே அண்ணணாம் ஆதவனுடன் கிளம்பிச் சென்றாள் மன்னனைப் பிரிந்ததாலே மாண்பும் மங்கியது மரியாதையு...